
ஷா அலாம் , பிப் 25 - வாகனத்தில் மோதப்படுவதிலிருந்து தப்ப முயன்ற கன்றுக்குட்டி ஒன்று கால்வாயில் விழுந்தால் 30 நிமிடத்திற்கும் மேலாக சிக்கித் தவித்தது.
சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு விரைந்த பினாங்கு , Tanjung Tokong தீயணைப்பு நிலையத்தின் தீயணைப்பு வீரர்கள் அந்த கன்றுக்குட்டியை பாதுகாப்புடன் மீட்டனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் 30 ஆம் தேதி நடந்த அந்த சம்பவம் இப்போதுதான் வைரலானதால் அது குறித்த தனது அனுபவத்தை 43 வயதுடைய Mohd Supian Norharun என்ற தீயணைப்பு வீரர் பகிர்ந்து கொண்டார்.
அந்த கன்றுக் குட்டியை மீட்கும் நடவடிக்கையில் ஆறு தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.
இச்சம்பவம் குறித்து பொதுமக்களிடமிருந்து காலை மணி 7.15அளவில் தகவல் கிடைக்கப்பெற்றதை தொடர்ந்து சம்பவம் நடந்த இடத்திற்கு சென்றுபோது அந்த கன்றுக்குட்டியின் உடல் அமைப்புக்கு ஏற்பவே கால்வாய் இருந்ததால் தீயணைப்பு வீரர்கள் சிரமத்தை எதிர்நோக்கினர்.
அதோடு எங்களை பார்த்தவுடன் அந்த கன்றுக் குட்டி மிரண்டதோடு முரட்டுத்தனமாக செயல்பட்டது. எனினும் அந்த கன்றுக்குட்டியை அமைதிப்படுத்தி சிறப்பு சாதனத்தின் மூலம் அதனை மீட்பதில் வெற்றி பெற்றோம் என முகமட் சுபியன் தெரிவித்தார்.