
ஷா அலாம், ஜூன் 27 – நேற்று, ‘கிளன்மேரி’ எல்ஆர்டி நிலையம் அருகேயுள்ள வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களை கனரக வாகனமொன்று மோதி விபத்துக்குள்ளான சம்பவம் குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர் என்று ஷா அலாம் காவல்துறைத் தலைவர் இக்பால் இப்ராஹிம் கூறியுள்ளார்.
ஓட்டுநர்கள் எல்.ஆர்.டி நிலையத்திற்கு அருகில் தங்களது வாகனங்களை நிறுத்தி வைத்து விட்டு வேலைக்குச் சென்ற நிலையில், பின்னர் அவர்கள் திரும்பி வந்து பார்த்தபோது, அவர்களின் கார்கள் லாரியால் மோதியதைக் கண்டறிந்துள்ளனர் என்று மேலும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக ஷா அலாம் காவல்துறைக்கு ஏழு புகார்கள் கிடைத்துள்ளதாகவும் இவ்வழக்கை சாலை போக்குவரத்து விதி மீறல் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அறியப்படுகின்றது.
இந்நிலையில் கனரக வாகனங்கள் கவனக்குறைவாகவோ அல்லது அலட்சியமாகவோ வாகனம் ஓட்டுவது சமீபக் காலமாக அதிகரித்து வரும் நிலையில், இச்சம்பவம் தொடர்பாக தகவல் தெரிந்த பொதுமக்கள் உடனடியாக காவல் நிலையத்தை அணுக வேண்டுமெனவும் கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.