Latestமலேசியா

கோலாலம்பூரில் பாலஸ்தீன ஆதரவுப் பேரணி தொடர்பில் வாக்குமூலம் அளிக்கச் சென்ற போது போலீஸாரின் பாலியத் தொல்லையா? பெண்ணின் புகார் விசாரிக்கப்படுகிறது

கோலாலம்பூர், பிப்ரவரி-8 – பாலஸ்தீன ஆதரவுப் பேரணி தொடர்பில் வாக்குமூலம் அளிக்கச் சென்ற இடத்தில், பெண்ணொருவர் போலீஸாரின் பாலியல் தொல்லைக்கு ஆளான சம்பவம் விசாரிக்கப்படுகிறது.

சம்பந்தப்பட்ட பெண்ணிடமிருந்து புகார் கிடைத்திருப்பதை, கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ருஸ்டி மொஹமட் இசா உறுதிப்படுத்தினார்.

டிசம்பர் 19-ஆம் தேதி நடைபெற்ற பேரணி தொடர்பில், புகார்தாரரோடு சேர்த்து மொத்தம் 9 பேர் சம்பவத்தன்று வங்சா மாஜூ போலீஸ் நிலையம் வந்திருந்ததாக அவர் சொன்னார்.

விசாரணை நடைபெற்று வருவதால், அதற்கு இடையூறு ஏற்படும் வகையில் யூகங்களை எழுப்ப வேண்டாமென அவர் பொது மக்களைக் கேட்டுக் கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!