Latestமலேசியா

சிரம்பானில் துயரம்; நீர் சுத்திகரிப்பு ஆலையில் மூழ்கி 12 வயது சிறுவன் பலி

சிரம்பான், மார்ச்-9-சிரம்பான், Taman Widuri Indah Water நீர் சுத்திகரிப்பு ஆலையில் உள்ள நீர் சேமிப்புத் தொட்டியில், 12 வயது சிறுவன் தவறி விழுந்து உயிரிழந்துள்ளான்.

நேற்று தனது 2 தம்பிகளுடன் அவன் அங்கு மீன் பிடிக்கச் சென்ற போது இத்துயரம் நிகழ்ந்தது.

சுமார் 5 மீட்டர் ஆழமுள்ள நீர் தொட்டிக்குள் அவன் விழுந்ததாகக் கூறப்படுகிறது.

தீயணைப்பு – மீட்புத் துறையினர் சம்பவ இடம் விரைந்து சிறுவனைத் தொட்டியிலிருந்து மீட்டனர்.

எனினும், அவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதை மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

மேல் விசாரணைக்காக, சிறுவனின் உடல் போலீஸிடம் ஒப்படைக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!