
கோலாலம்பூர், மே-30 – கோலாலம்பூர் ஜாலான் பங்சாரில் தனது MPV வாகனம் திடீரென தீப்பிடித்ததால் பெண்ணொருவர் திக்கற்று நின்றார்.
எனினும் நேற்று காலை நிகழ்ந்த அச்சம்பவத்தில், கிராப் மோட்டார் சைக்கிளோட்டி ஓடோடி வந்து அவருக்கு உதவிக் கரம் நீட்டினார்.
Affif எனும் அவ்வாடவர், அப்பெண்ணை 999 அவசர எண்ணுக்கு அழைக்கச் சொல்லி ஆலோசனைக் கொடுத்ததோடு, சாலையில் முக்கோண கூம்புகளை வைத்து போக்குவரத்தையும் திருப்பி விட்டார்.
பின்னர் தீயணைப்புப் படையும் போலீஸும் வந்து தீயை அணைத்து, DBKL காரை அப்புறப்படுத்தியது.
காரிலிருந்து புகை கிளம்பிய 2 மணி நேரங்களில் இவையத்தும் நடந்து முடிந்ததாக தனது சமூக ஊடகப் பக்கத்தில் குறிப்பிட்ட Lilian Wong எனும் அம்மாது, தக்க சமயத்தில் உதவிக்கு வந்த கிராப் மோட்டார் சைச்கிளோட்டியை மறக்கவில்லை.
Affif-ஃபுடன் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படத்தை பகிர்ந்து அவருக்கு Lilian நன்றித் தெரிவித்தார்