Latestமலேசியா

400,000 ஆசிரியர்களுக்கும் வாரிவுப்படுத்தப்படும் புத்தகப் பற்றுச் சீட்டுத் திட்டம்; பிரதமர் அறிவிப்பு

கோலாலம்பூர், ஜூன்-1 – புத்தகப் பற்றுச் சீட்டுத் திட்டம் இவ்வாண்டு 400,000 ஆசிரியர்களுக்கும் விரிவுப்படுத்தப்படுவதாக பிரதமர் அறிவித்துள்ளார்.

நாட்டு மக்கள் குறிப்பாக பள்ளி மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் முயற்சி, தற்போது ஆசிரியர்களையும் உட்டுப்படுத்தியிருப்பதாக டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

மேலும் என்ன செய்ய முடியும் என்பதை அடுத்தாண்டு நிதி நிலைமைப் பொருத்து பார்க்கலாம் என, கோலாலம்பூர் உலக வாணிப மையத்தில் 2025 அனைத்துலக புத்தகக் கண்காட்சியை நிறைவு செய்து உரையாற்றுகையில் பிரதமர் கூறினார்.

இவ்வேளையில் இந்த புத்தகப் பற்றுச் சீட்டு விநியோகத்தில் தெளிவான வழிகாட்டி இருக்க வேண்டும்;

தரமற்ற புத்தகங்களை வாங்க அவை பயன்படுத்தப்படுவதைத் தடுக்க வழிகாட்டிகள் அவசியமென்றார் அவர்.

மே 23-ஆம் தேதி தொடங்கிய இந்த புத்தகப் பெருவிழா இன்றோடு நிறைவடைகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!