Latestமலேசியா

தாமான் ஸ்ரீ மூடாவில் பம்ப் அமைப்பு முறை மீண்டும் சீராக இயங்குகிறது; மந்திரி பெசார் தகவல்

ஷா ஆலாம், ஏப்ரல்-23, ஷா ஆலாம், தாமான் ஸ்ரீ மூடாவில் வெள்ளக் கட்டுப்பாட்டுக்கான பம்ப் குழாய் அமைப்பு வழக்கம் போல் சீராக செயல்டத் தொடங்கியுள்ளது.

சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ. அமிருடின் ஷாரி அதனைத் தெரிவித்தார்.

அப்பகுதியில் மின்சார விநியோகப் பிரச்னையை TNB சரி செய்த கையோடு, கடந்த வார புதன்-வியாழக் கிழமைகளிலேயே அது வழக்கத்திற்குத் திரும்பியது

அதனால் தான், சனிக்கிழமை குறைந்தது 2 மணி நேரங்களுக்கு கனமழை பெய்த போதும் தாமான் ஸ்ரீ மூடாவில் திடீர் வெள்ளம் ஏற்படவில்லை என அவர் கூறினார்.

இந்நிலையில் தண்ணீர் பூட்டு, வடிகால் முறை போன்ற சில விஷயங்களை சரி செய்ய வேண்டியுள்ளது.

இந்தப் பராமரிப்புப் பணிகளில் ஊராட்சி மன்றங்கள் மெத்தனம் காட்டக் கூடாது என்றும் அமிருடின் நினைவுறுத்தினார்.

திடீர் வெள்ளத்தைத் தடுக்க இது அவசியமென்றார் அவர்.

மேற்கண்ட அனைத்து விஷயங்களும் திங்கட்கிழமை நடந்தப்பட்ட ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.

மாநில அரசு அமைத்துள்ள சிறப்புப் பணிக்குழு உள்ளிட்ட தகவல்கள் தாமான் ஸ்ரீ மூடா குடியிருப்பாளர்களிடம் தெரிவிக்கப்படும்.

வெள்ளத்தால் அவர்கள் படும் இன்னல்களைத் தாம் அறிவேன் என்றும் மந்திரி பெசார் கூறினார்.

தாமான் ஸ்ரீ மூடாவில் திடீர் வெள்ளப் பிரச்னை தொடர்கதையாகி வருவதால், அதற்கு நிரந்தர தீர்வுக் கோரி சுமார் 500க்கும் மேற்பட்டோர் பேர் கடந்த ஞாயிறன்று அமைதி மறியல் நடத்தியது குறிப்பிடத்தக்கது

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!