Latestமலேசியா

46வது, ஆசியான் மாநாடு; பிரமுகர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் AKPS

புத்ராஜெயா, மே 19- வருகின்ற மே 26 மற்றும் 27-இல், மலேசியா KLCC-இல் நடைபெறவிருக்கும் 46வது ஆசியான் மாநாட்டை (ASEAN) முன்னிட்டு, நம் நாட்டிற்கு வருகைப்புரியும் பிற நாட்டு பிரதிநிதிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய, எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நிறுவனமான AKPS, நாட்டின் முக்கிய நுழைவுப் பகுதிகளின் பாதுகாப்பான சூழலை உறுதிச்செய்து வருகின்றது.

இந்நிலையில், நாட்டின் முக்கிய நுழைவுப் புள்ளிகளான கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம் (KLIA) 1 மற்றும் 2, செப்பாங்கிலுள்ள பூங்கா ராயா வளாகம் போன்றவற்றில் பிரமுகர்களின் வருகைச் சீராக இருப்பதற்கு பல்வேறு செயல்முறைகளை அமல்படுத்தி வருவதாக AKPSன் செயல் இயக்குநர் ஜெனரல் டத்தோ சசாலி முகமது கூறியுள்ளார்.

மேலும், மலேசியா ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட்வுடன் (MAHB) இணைந்து சிறப்பு பாதையொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதையும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இம்மாநாட்டில், மலேசிய வெளியுறவு அமைச்சகம், மலேசிய காவல் துறையினர் ம், MAHB, மலேசிய குடிநுழைவுத்துறை மற்றும் சுகாதார அமைச்சுடன் இணைந்து, AKPS தங்களுடைய முழு ஒத்துழைப்பை வழங்கும் என்பதில் திட்டவட்டமாக உள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

தொடர்ந்து, அதே நாளன்று, இரண்டாவது ASEAN-GCC மாநாடு மற்றும் முதல் ASEAN-GCC-சீனா பொருளாதார மாநாடும் நடைபெறுவதோடு, 1977, 1997, 2005 மற்றும் 2015 க்குப் பிறகு, மலேசியா மீண்டும் ASEAN மாநாட்டை ‘உள்ளடக்கம் மற்றும் நிலைத்தன்மை’ என்ற கருப்பொருளோடு தலைமைத்தாங்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!