Latestமலேசியா

பதிவுக்கான உரிமை கட்சியின் முறையீடு; உள்துறை அமைச்சர் சைபுடின் நிராகரித்தார்

கோலாலம்பூர், மார்ச் 14 -அரசியல் கட்சியாகப் பதிவு செய்ய வேண்டும் என்ற உரிமை கட்சியின் மேல்முறையீட்டை உள்துறை அமைச்சர் சைபுடின் நசுட்டியோன் இஸ்மாயில் (Saifuddin Nasution Ismail ) நிராகரித்துவிட்டதாக அதன் தலைவரும் பினாங்கு மாநிலத்தின் முன்னாள் துணை முதலமைச்சருமான பேராசிரியர் டாக்டர் பி. ராமசாமி தெரிவித்தார்.

கடந்த ஆண்டு ஜூலை 4 ஆம் தேதி தனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக சங்கங்களின் பதிவதிகாரி உரிமை கட்சியிடம் தெரிவித்தார்.

பிப்ரவரி 27 ஆம் தேதி, அரசாங்கத்தின் முடிவுக்கு எதிராக நீதித்துறை சீராய்வு நடவடிக்கைகளைத் தொடங்க கட்சிக்கு கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது.

முறையான நடைமுறையின்படி, நாங்கள் அமைச்சரிடம் மேல்முறையீடு செய்தோம், ஆனால் நீதிமன்ற விசாரணை தொடங்குவதற்கு முன்பே அவரது நிராகரிப்பு வந்துள்ளது.

மார்ச் 7 தேதியிட்ட கடிதத்தில், சங்கங்களின் பதிவதிகாரி நிராகரிப்புக்கான எந்த காரணங்களையும் வழங்காமல் அமைச்சரின் முடிவைத் தெரிவித்தார் என்று ராமசாமி வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டினார்.

உரிமையின் பதிவு நிராகரிப்பு அரசியல் கட்சிகள் மற்றும் சங்கங்களை உருவாக்கும் உரிமையை உறுதி செய்யும் அரசியலமைப்புச்சட்ட விதிகளுடன் ஒத்துப்போக வேண்டும் என்று கூறினார்.

நிராகரிப்பு ஆச்சரியப்படுவதற்கில்லை என்றாலும், உரிமையின் வளர்ந்து வரும் அரசியல் செல்வாக்கு தற்போதைய அரசாங்கத்தை நிலைகுலையச் செய்துள்ளது என்பது தெளிவாகிறது என்று அவர் மேலும் கூறினார்.

கட்சியின் நீதித்துறை சீராய்வு மனு மீதான விண்ணப்பம் மற்றும் அறிக்கையை திருத்துவதற்காக அதன் சட்டக் குழு இன்று நீதிமன்றத்தில் ஒரு நோட்டீஸ் தாக்கல் செய்யும் என்று உரிமையின் வழக்கறிஞர் ஷம்ஷெர் சிங் திண்ட், ( Shamsher Singh Thind ) தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!