Latestமலேசியா

வாகனமோட்டும் போது கண்ணயர்ந்த பெண்; 2 வயது பாலகன் பலி, 6 பேர் காயம்

புக்கிட் கட்டில், மார்ச்-23 – மலாக்கா புக்கிட் கட்டிலில் வாகனமோட்டும் போது ஓட்டுநர் கண்ணயர்ந்ததால் விபத்து ஏற்பட்டு 2 வயது பாலகன் பரிதாபமாக உயிரிழந்தான்.

நேற்று பிற்பகல் 2.40 மணிக்கு ஏற்பட்ட அவ்விபத்தில் மேலும் அறுவர் காயமடைந்தனர்.

31 வயது பெண்மணி ஓட்டிச் சென்ற Perodua Axia காரில் அவரின் 4 பிள்ளைகளும் பயணித்துள்ளனர்.

மற்ற 3 குழந்தைகளுக்கு முறையே 7, 4 மற்றும் 9 வயதாகும்.

மலாக்கா பட்டணத்திலிருந்து Tehel செல்லும் வழியில் ஒரு சில வினாடிகளுக்கு அவர் கண்ணயர்ந்ததால், கார் கட்டுப்பாட்டை இழந்து எதிர் பாதையில் நுழைந்து, அவ்வழியே வந்த Perodua Myvi காருடன் மோதியது.

அதில் தலையில் படுகாயமடைந்த அவரின் 2 வயது மகன் மருத்துவமனையில் மரணமடைந்த வேளை, மற்ற 3 பிள்ளைகளுக்கு கால் எலும்பு முறிவும் இதர சிராய்ப்புக் காயங்களும் ஏற்பட்டன.

விபத்தில் சம்பந்தப்பட்ட 35 வயது Myvi காரோட்டுநருக்கும் அவரின் 45 வயது அண்ணனுக்கும் வயிற்றிலும் நெஞ்சிலும் காயங்கள் ஏற்பட்டதாக மலாக்கா தெங்கா போலீஸ் கூறியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!