
கோலாலம்பூர், ஏப்ரல்-10, கிழிந்துபோன சீருடை தொடர்பான உள் விவகாரத்தால் பாதிக்கப்பட்ட ஓர் ஊழியரிடம், Pos Malaysia Bhd-டின் தலைமை செயலதிகாரி Charles Brewer மன்னிப்புக் கோரியுள்ளார்.
அவ்விவகாரம் குறித்து இதற்கு முன் தான் பேசிய பேச்சு யாரையாவது காயப்படுத்தியிருந்தால் அதற்கும் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாக அவர் சொன்னார்.
பதில் கூறும் போது நிதானமாகவும் பொறுப்போடும் நடந்துகொள்ள வேண்டும் என்பதை, அவர் மனதார உணர்ந்திருப்பதாக, Pos Malaysia வெளியிட்ட அறிக்கைத் தெரிவிக்கிறது.
இனி, ஒருவரை ஒருவர் மதிக்கும் கலாச்சாரத்தை உருவாக்குவதோடு, அனைத்து பணியாளர்களையும் ஆதரித்து அரவணைத்துச் செல்ல அந்தத் தேசிய தபால் நிறுவனம் உறுதியளித்தது.
வைரலான அச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஊழியருடன் நேரடியாக நல்ல முறையில் பேசி தீர்வுக் கண்டுள்ளோம்.
அதோடு, கிழிந்துபோன சீருடைகளை முறையாகவும் விரைவாகவும் மாற்றிக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அவ்வறிக்கை மேலும் கூறியது.
சம்பந்தப்பட்ட தபால்காரர் முன்னதாக, கிழிந்துபோன சீருடை குறித்து சமூக ஊடகத்தில் விரக்தியை வெளிப்படுத்தியிருந்தார்.
விரைவிலேயே மாற்று சீருடை கிடைக்கும் எனவும் அவர் எதிர்பார்ப்பை வெளியிட்டார்.
எனினும், அப்பதிவுக்கு Brewer பதிலளித்த விதம் வலைத்தளவாசிகளை முகம் சுளிக்க வைத்து, அவ்விவகாரம் வைரலானது