Latestமலேசியா

மலாக்காவில் PPR அடுக்குமாடி வீட்டில் தீ; உள்ளேயே சிக்கி 4 வயது குழந்தை பலி

மலாக்கா, மே-17 – மலாக்கா, குருபோங், பாயா ரும்புட்டில் PPR அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில், 4 வயது பையன் வீட்டுக்குள்ளேயே சிக்கி பரிதாபமாக உயிரிழந்தான்.

நேற்று பிற்பகல் 2.20 மணியளவில் அத்துயரச் சம்பவம் நிகழ்ந்தது.

வீட்டின் அறையொன்றில் சுயநினைவற்ற நிலையில் கிடந்த குழந்தையைத் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

எனினும் அவன் உயிரிழந்து விட்டதை மருத்துவக் குழு உறுதிப்படுத்தியது.

தீ ஏற்பட்ட போது சிறுவனின் தாய் மற்றும் இதர பிள்ளைகள் வீட்டுக்குள் தான் இருந்துள்ளனர்; ஆனால் அவர்களால் வெளியே ஓடி உயிர் தப்பிக்க முடிந்தது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக, மலாக்கா தீயணைப்புத் துறை கூறியது.

தீயில் அவ்வீடு 30 விழுக்காடு சேதமடைந்ததுள்ளது; என்றாலும் தொடர்ந்து தங்குவதற்கு அதன் கட்டமைப்பு இன்னமும் பாதுகாப்பாகவே இருப்பதை அத்துறை உறுதிப்படுத்தியது.

தீ ஏற்பட்டதற்கான காரணம் விசாரிக்கப்பட்டு வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!