Latestமலேசியா

முன்னாள் ம.இ.கா தலைவர் பழனிவேலுவுக்கு இறுதி வணக்கம்; அமைதியான வரலாற்று தலைவருக்கு டான் ஶ்ரீ குமரன் இரஙகல்

கோலாலம்பூர், ஜூன் 18 – மேனாள் ம.இ.கா.வின் தலைவர் டத்தோஸ்ரீ கோ.பழனிவேலுவின் மறைவு செய்தி வருத்தமளிக்கிறது, அவரது பிரிவால் துயரில் ஆழ்திருக்கும் குடும்பத்தினர்க்கும், சுற்றத்தினர்க்கும் தமது இரங்கலை தெரிவித்துக் கொண்டுள்ளார் டான் ஸ்ரீ க.குமரன்,

ம..இ. கா.வின் எட்டாவது தலைவராக குறுகிய காலமே பொறுப்பில் இருந்த காலத்தில் கட்சியை நடத்துவதில் பல வழக்குகளையும், சர்ச்சைகளையும், சவால்களையும் எதிர்நோக்கி கட்சியை நடத்தியவர் டத்தோ ஸ்ரீ பழனிவேல்.

தமது இருபதாம் அகவையில் பினாங்கு ம.இ.கா. ஜெலுத்தோங் கிளையில் அடியெடுத்து வைத்த இவர், துன். ச.சாமிவேலுவின் ஊடகச் செயலாளராக பொறுப்பேற்றபின் அவருடைய நம்பிக்கைக்குரிய ஒருவராக வளரத் தொடங்கினார்.

அரசியலிலும் அரசாங்கத்திலும் பல பொறுப்புகளும் பதவிகளும் அவரை தேடிவந்தன. 1990-2008 ஆண்டுகளில் நடைபெற்ற ஐந்து பொதுத் தேர்தலில் உலுசிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதியில் ஐந்து முறை போட்டியிட்டு நான்கு முறையும் 2013-ஆமா ஆண்டில், பஹாங் கேமரன் மலைத் தொகுதியில் ஒருமுறையும் வெற்றிபெற்றதுடன் நாடாளுமன்ற மேலவை உறுப்பினராகவும் நீண்டகாலம் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.

அரசாங்கத்தில், நாடாளுமன்ற செயலாளர், துணை அமைச்சர், அமைச்சர் என்ற பறுப்புகளில் இருந்துள்ளார் பழனிவேல்.

அவர் அமைச்சரவையில் இருந்தபோதுதான், இந்தியர்களுக்கான சீட் திட்டம் உருவாக்கப்பட்டது என்பது வரலாற்றுப் பதிவாகும். இத்திட்டமே பின்னாளில் மலேசிய இந்தியர் பொருளாதார உருமாற்று திட்டமான மித்ராவாக உருவாக பிள்ளையார் சுழி போட்டது.

ம.இ.கா. தலைமைப் பொறுப்பினை குறுகிய காலமே ஏற்றிருந்தவர், ஆன்மிகத்தில் அதிக நாட்டம் கொண்டு ஆரவாரமில்லாமல் அரசியல் நடத்தியவர் பழனிவேல் .

அரசியலிலிருந்து ஓய்வு பெற்ற என்னை அழைத்து ம.இ.கா. தேசிய பேரவையின் சபாநாயகராக பணியாற்ற கொடுத்த வாய்ப்பை நன்றியுடன் நினைவு கூறுவதாக தெரிவித்துள்ள டான் ஶ்ரீ குமரன் அவரது ஆத்மா அமைதியுற இறைவனிடம் வேண்டுவதாக தனது இறங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளாஎ.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!