
கோலாலம்பூர், ஏப் 29 – மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்படும் 24 விழுக்காடு வரி தொடர்பில் மலேசியாவுடன் அதிகாரப்பூர்வ பேச்சுக்களைத் தொடங்க அமெரிக்கா இணக்கம் தெரிவித்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக ஏற்றத்தாழ்வுகள், வரி குறைப்பு, வரி அல்லாத தடைகள் மற்றும் மூன்று குறிப்பிட்ட விவகாரங்களில் பேச்சுக்கள் கவனம் செலுத்தப்படும் என முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு ஷப்ருல் அஸிஸ் ( Tengku Zafrul Aziz ) தெரிவித்தார்.
அமெரிக்காவுடனான பேச்சு நடத்தும் குழுவுக்கு தலைவராக அமைச்சின் துணைத் தலைமைச் செயலாளர் Mastura Ahmad Mustafa நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவுக்கான வர்த்தகர் பேராளர் அலுவலகத்தின் துணை பிரதிநிதியும் இக்குழுவில் இடம் பெற்றிருப்பார் என Tengku Zafrul கூறினார்.
வரி தொடபில் பேச்சு நடத்தும் மலேசிய குழுவிற்கு தலைமையேற்று ஏப்ரல் 23 ஆம்தேதி முதல் ஏப்ரல் 27ஆம்தேதிவரை Tengku Zafrul அமெரிக்காவில் இருந்தார்.
பெரும்பாலான மலேசியப் பொருட்களுக்கு 24 விழுக்காடு வரியும் இதர 60 நாடுகளுக்கு மாறுபட்ட விழுக்காடு வரியையும் அமெரிக்கா அறிவித்தது. மேலும் பேச்சு நடத்துவதற்கு அனுமதிக்கும் வகையில் 90 நாட்களுக்கு புதிய வரி அமலாக்கத்தையும் தற்காலிகமாக அமெரிக்கா இடைநிறுத்தம் செய்துள்ளன