
கோலாத் திரெங்கானு, ஜூலை 4 – மூன்று நாட்கள் ஆகியும், விரைவு பஸ்களில் சீட் பெல்ட் எனப்படும் இருக்கைகளின் பாதுகாப்பு பெல்ட் அணியாமல் இருப்பது குற்றம் என்று தங்களுக்குத் தெரியாது என்று சாக்குப்போக்கு சொல்லும் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் பயணிகள் இன்னும் இருக்கிறார்கள். சீட் பெல்ட் சிக்கியிருப்பதாகவோ அல்லது இடுப்பு மிகவும் பெரிதாக உள்ளது , பாதுகாப்பு உபகரணங்கள் அணிய பொருத்தமாக இல்லை மற்றும் அமலாக்க அதிகாரிகள் சம்மன் அனுப்ப மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் விரைவு பஸ் பயணிகள் .
இருப்பது ஏற்புடையதாக இல்லையென திரெங்கானு சாலைப் போக்குவரத்துத் துறையின் இயக்குநர் முகமட் ஜம்ரி சாமியோன்,
( Mohd Zamri Samion ) தெரிவித்தார். நேற்றிரவு செண்டெரிங்கில்
( Chendering ) விரைவு பஸ்கள் மற்றம் சுற்றுலா பஸ்களில் சீட் பெல்ட் அணியும் நடவடிக்கையை தொடர்பான சோதனை நடவடிக்கையின்போது பயணிகள் கூறும் சாக்குப் போக்கு மற்றும் தந்திரங்களில் இதுவும் ஒன்று என அவர் ஒப்புக்கொண்டார்.
இந்த விவகாரத்தில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை. பஸ்களில் பயணம் செய்யும் தங்களது பயணிகள் அவர்களது இருக்கைகளின் பாதுகாப்பு சீட் பெல்ட் அணிந்துகொள்வதை பயணம் தொடங்குவதற்கு முன்னதாகவே அவர்களிடம் நினைவுறுத்துவது பஸ் ஓட்டுனர்களின் பொறுப்பு என Mohd Zamri Samion தெரிவித்தார்.
நேற்றிரவு 13 விரைவு பஸ்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்தத் தவறியதற்காக ஓட்டுநர்கள் மற்றும் பயணிகளுக்கு எதிராக நான்கு சம்மன்கள் பிறப்பிக்கப்பட்டன. ஓட்டுநர் அல்லது பயணிகளின் இருக்கையில் நிறுவப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் சரியாகச் செயல்படுகின்றனவா என்பதை விரைவு பேருந்து நடத்துநர்கள் உறுதி செய்ய வேண்டும் என்பதையும் சாலை போக்குவரத்துறை அதிகாரிகள் நினைவூட்டினர்.