
ஈப்போ, ஏப்ரல்-26- AI அதிநவீனத் தொழில்நுட்ப அம்சங்களை ஆரம்பத்திலிருந்தே கற்றல் கற்பித்ததில் புகுத்துமாறு, அனைத்துப் பள்ளிகளையும் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டுள்ளார்.
இப்போது கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழக அளவில் தான் இந்த AI பாடமாகப் போதிக்கப்படுகிறது.
AI கல்விப் புலம், AI துறை அல்லது AI பிரிவு என உயர் கல்விக் கூடங்களில் அது விஸ்தரித்துள்ளது.
அடுத்து பள்ளிகளிலும் AI தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வர வேண்டும்.
இன்னும் 5 ஆண்டுகள் காத்திருந்தால் உலகம் போகும் வேகத்தில் நாம் பின்தங்கி விடுவோம் என்றார் அவர்.
பகடிவதை, இனவாதம் போன்ற கெட்டப் பழக்கங்களை விட்டொழித்து, கட்டொழுங்கு மிக்கவர்களாக மாணவர்களை உருவாக்குவதில் பள்ளிகள் தீவிரம் காட்ட வேண்டும்.
நல்வழிக்கு அவர்களைத் திசைத் திருப்ப AI சார் கற்றல் கற்பித்தல் துணைபுரியலாமென அவர் சொன்னார்.
இதன் மூலம் பள்ளி அளவிலேயே மாணவர்கள் AI-யில் சிறந்து விளங்க முடியும்.
பேராக், தம்புன் நாடாளுமன்றத் தொகுதியில் வீடமைப்பு – ஊராட்சித் துறை அமைச்சு KPKT ஏற்பாடு செய்திருந்த Majlis Santunan Kasih நிகழ்ச்சியால் பங்கேற்று பேசிய போது டத்தோ ஸ்ரீ அன்வார் அவ்வாறு சொன்னார்.
அந்நிகழ்வில் KPKT அமைச்சர் ஙா கோர் மிங், பெர்ஜாயா குழுமத்தின் நிறுவனரும் ஆலோசகரான தான் ஸ்ரீ வின்சென்ட் தான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தம்புன் சுற்று வட்டாரத்தில் உள்ள 2,000 பள்ளி மாணவர்களுக்கு விநியோகிக்க ஏதுவாக 1 மில்லியன் ரிங்கிட் நிதியும் அதில் ஒப்படைக்கப்பட்டது