Latestமலேசியா

அடுத்த வார பள்ளி விடுமுறையில் கடப்பிதழ் அலுவலகங்கள் இரவு 8 மணி வரை செயல்படும்

புத்ராஜெயா, செப்டம்பர்-13, நாடு முழுவதும் கடப்பிதழ்களை வெளியிடும் அலுவலகங்களின் சேவை நேரம் அடுத்த வார பள்ளி விடுமுறையின் போது ஒவ்வொரு நாளும் 3 மணி நேரம் அதிகரிக்கப்படுகிறது.

அவ்வகையில் செப்டம்பர் 17 தொடங்கி 22 வரை அனைத்து 72 அலுவலகங்களும் இரவு 8 மணி வரை செயல்படும் என, குடிநுழைவுத் துறை அறிவித்துள்ளது.

பள்ளி விடுமுறை காலம் என்பதால், சேவை முகப்புகளில் நெரிசலைக் குறைப்பதையும், கடப்பிதழ் வெளியீட்டை சீராக்குவதையும், அந்த சேவை நேர நீட்டிப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது.

மதிய உணவு இடைவேளை நேரமான பிற்பகல் 1 மணி முதல் 2 மணி வரையின் போதும் அலுவலகங்கள் திறந்திருக்கும்.

வழக்கமான வார நாட்களில் நாளொன்றுக்கு சராசரியாக 10,000 விண்ணப்பங்கள் வந்தால், பள்ளி விடுமுறை நாட்களில் 15,000-மாக அது உயரும்.

கோவிட்-19 பெருந்தொற்று காலத்துக்குப் பிறகு அதிகமான மலேசியர்கள் வெளிநாட்டு சுற்றுப் பயணங்களை மேற்கொள்ளும் போக்கைக் காண முடிவதாக குடிநுழைவுத் துறை கூறியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!