
தெலுக் இந்தான், மே 13 – FRU எனப்படும் கலகத் தடுப்பு படை உறுப்பினர்களின் வாகனம் கற்களை ஏற்றிச் சென்ற லோரியுடன் மோதிய கோர விபத்தில் எண்மர் உயிரிழந்தனர்.
தெலுக் இந்தான் Jalan Chikus – Sungai Lampam மில் இந்த விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் மரணம் அடைந்த அனைவரும் கலகத் தடுப்பு படையின் உறுப்பினர்கள் என்பதோடு மேலும் பலர் காயம் அடைந்ததாக தொடக்கக் கட்ட தகவல்கள் மூலம் தெரியவருகிறது.
இச்சம்பவத்தை பேரா தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் இயக்குநர் சயானி சைடோன்
( Sayani Saidon) உறுதிப்படுத்தினார். இன்று காலை மணி 8. 15 அளவில் நிகழ்ந்த இந்த விபத்தின்போது கலகத் தடுப்பு படையின் வாகனத்தில் அதன் ஓட்டுனரும் 15 பயணிகளும் இருந்ததாக அறிவிக்கப்பட்டது.