Latestமலேசியா

அரசாங்கத்தின் மீதான மக்களின் புகார்களை Ombudsman அமைப்பு முறையால் விரைந்து தீர்க்க முடியும்; டத்தோ முருகையா நம்பிக்கை

கோலாலம்பூர், ஜூன்-22 – மலேசியாவில் Ombudsman அமைப்பு முறையை உருவாக்கும் முன்முயற்சியை முழுமையாக வரவேற்பதாக, ம.இ.கா தேசிய உதவித் தலைவர் டத்தோ T. முருகையா கூறியுள்ளார்.

இது, சிறிய வழக்குகள் மற்றும் அரசாங்கத்தின் மீதான பொது மக்களின் புகார்கள் தொடர்பான விஷயங்களை தீர்க்கும் முக்கியமான மற்றும் காலத்திற்குத் தேவையான நடவடிக்கையாகும் என்றார் அவர்.

இதன் மூலம் நீதிமன்றங்களின் சுமை குறையலாம்; தீர்வுகள் விரைவாகக் கிடைக்கலாம்; மற்றும் அரசாங்க சேவை வழங்கல் மேலும் திறம்பட செயல்படலாம் என முன்னாள் துணையமைச்சருமான அவர் அறிக்கையொன்றில் கூறினார்.

Ombudsman அமைப்பு முறை ஏற்கனவே பிரிட்டன், சுவீடன், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற பல முன்னேறிய நாடுகளில் பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது.

இந்த அமைப்பு முறை அங்குள்ள மக்களின் நம்பிக்கையை வென்றதோடு, நியாயமான மற்றும் விரைவான தீர்வுகளை வழங்குவதில் வெற்றிப் பெற்றுள்ளது.

மலேசியா இப்போது தான் இந்த அமைப்பு முறையை நிறுவ முனைந்து வருகிறது — இது தாமதமானாலும் சரியான மற்றும் உகந்த நடவடிக்கை என தாம் உறுதியாக நம்புவதாக முருகையா சொன்னார்.

“பிரதமர் துறையின் துணை அமைச்சராக முன்பு பணியாற்றிய போது, PCB எனப்படும் பொது புகார் அலுவலகத்தை நிர்வகிக்கும் பொறுப்பை வகித்தேன். அப்போது, அரசாங்கம் Ombudsman முறைக்கு அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளிக்கவில்லை என்றாலும், நானே ஆயிரக்கணக்கான பொது மக்கள் புகார்களை ஒரு Ombudsman மாதிரி நேரடியாகவும், விரைவாகவும், நீதிமன்ற நடவடிக்கைகள் இல்லாமல் தீர்த்தேன்” என டத்தோ முருகையா சுட்டிக் காட்டினார்.

Ombudsman என்பது, அரசுத் துறைகள், சட்டப்பூர்வ அமைப்புகள் மற்றும் அரசாங்க சேவை நிறுவனங்களுக்கெதிராக பொது மக்களிடமிருந்து வரும் புகார்களை விசாரித்து, எந்தவொரு அரசியல் தாக்கமுமின்றி நடுநிலையாகவும் சுதந்திரமாகவும் தீர்வுகளை வழங்கும் சுயேட்சை நிறுவனமாகும்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!