
கோலாலம்பூர், ஏப்ரல்-1 -HKL எனும் கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையின் அலட்சியத்தாலேயே தாயின் மரணம் ஏற்பட்டதாக நிரூபிக்கப்பட்ட வழக்கில், ஒரு விரிவுரையாளருக்கு RM255,000 இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
மருத்துவமனை மற்றும் அதன் பணியாளர்கள் மருத்துவ அலட்சியம் செய்துள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
வழக்குத் தொடுத்த விரிவுரையாளர் Lim Lee Sim, HKL வழங்கிய சிகிச்சை தேவையான தரத்துக்கு கீழானது என்றும், அதுவே தனது தாயின் மரணத்திற்கு வித்திட்டது என்றும் நீதிமன்றத்தில் நிரூபித்தார்.
இதையடுத்து, ஏற்பட்ட இழப்பு மற்றும் மனவேதனைக்கு ஈடாக இந்த இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.



