Latestஉலகம்

ஆகஸ்ட் மாதத்தில் பெய்த கனமழையால் ஹாங்காங்கில் கடும் பாதிப்பு

ஹங்காங், ஆகஸ்ட் 5 – ஹாங்காங்கிலும், தென் சீனாவின் பேர்ல் ரிவர் டெல்டாவைச் (Pearl River Delta) வை சுற்றியுள்ள உயர் தொழில்நுட்ப நகரங்களிலும் இன்று வரலாறு காணாத மழை பெய்ததால், மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் நீதிமன்றங்கள் மூடப்பட்டன. பிற்பகல் 2 மணிக்குள் ஹாங்காங்கில் 350 மில்லி மீட்டருக்கும் அதிகமாக மழை பெய்ததாக வானிலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

1884 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆகஸ்ட் மாதத்தில் அதிகமான மழைப்பொழிவு இதுவாகும். முன்னாள் பிரிட்டிஷ் காலனியில் செங்குத்தான மலைப்பகுதிகளில் இருந்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதையும், ஹாங்காங்கின் பல அடுக்கு நகரக் காட்சியை இணைக்கும் பல படிக்கட்டுகளில் இருந்து வேகமாக ஓடும் வெள்ள நீர் காரணமாக வானிலை ஆய்வு மையம் கடுமையான மழை எச்சரிக்கையை மாலை 5 மணி வரை நீட்டித்தது.

ஹாங்காங்கின் மிகப்பெரிய மருத்துவமனைக்கு வெளியே நீர் கணுக்கால் உயரத்திற்கு உயர்ந்தோடு , கனமழை காரணமாக நகரம் முழுவதும் மருத்துவமனைகளை மூடுவதாக மருத்துவ அதிகாரிகள் அறிவித்தனர்.

அதிக மழை மற்றும் பேரழிவு தரும் வெள்ளம், சீனாவின் பெருநிலத்தில் உள்ள அதிகாரிகளுக்கு பெரும் சவால்களை ஏற்படுத்தியுள்ளது. மக்களிடையே உயிரிழப்பை ஏற்படுத்தியுள்ளதோடு ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர், மேலும் பில்லியன் கணக்கான டாலர்கள் பொருளாதார இழப்புகள் தொடர்பான அச்சுறுத்தலும் ஏற்பட்டுள்ளது.

வார இறுதியில் தென் சீனாவில் திடீர் வெள்ளத்தைத் தொடர்ந்து புயல்கள் ஏற்பட்டன, இது குவாங்டாங் ( Guangdong ) மாநிலத்தில் 1,300 க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்களை உள்ளடக்கிய பெரிய அளவிலான மீட்பு நடவடிக்கையைத் தூண்டியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!