Latestமலேசியா

கட்டுமானப் பகுதியின் 22வது மாடியிலிருந்து விழுந்து வெளிநாட்டு தொழிலாளி பலி

ஷா அலாம், மே 28 – கடந்த திங்கட்கிழமை, ஷா ஆலாமிலிருக்கும் கட்டுமானப் பகுதியொன்றின் 22-வது மாடியிலிருந்து தவறி விழுந்த வெளிநாட்டு தொழிலாளி ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தின் போது, உயிரிழந்த அந்நபர் தலைக்கவசம் அணிந்திருக்கவில்லையென்று சிலாங்கூர் தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை (DOSH) தெரிவித்துள்ளது.

குறைந்த ஊதியத்தில் வேலை செய்யும் வெளிநாட்டு தொழிலாளர்களை பெரிதும் எதிர்பார்க்கும் உள்ளூர் கட்டுமானத் துறையினர், அவர்களின் பாதுகாப்பையும் கருத்தில் கொள்ளுதல் அவசியம்.

இச்சம்பவம் தொடர்பான விசாரணை முடியும் வரை, வேலை நிறுத்த உத்தரவை பிறப்பித்துள்ளனர் DOSH அதிகாரிகள்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!