Latestஅமெரிக்காஉலகம்சிங்கப்பூர்
தென்னாப்பிரிக்க தேசிய விலங்கியல் பூங்காவான Kruger Park-கில் யானை மிதித்து சுற்றுப்பயணி பலி

ஜொஹானெஸ்பர்க், ஜனவரி-27 – தென்னாப்பிரிக்காவின் பிரபல விலங்கியல் பூங்காவான Kruger Park-கில் சுற்றுப்பயணியை யானை மிதித்துக் கொன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
சுற்றுப்பயணியின் உயிர் போயிருப்பதால் பூங்கா நிர்வாகம் வருத்தமும் அனுதாபமும் தெரிவித்தது.
அதே சமயம் அத்துயரச் சம்பவத்தின் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை வைரலாக்க வேண்டாமென்றும் அது கேட்டுக் கொண்டது.
சுமார் 20,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அண்டை நாடான மொசாம்பிக் வரை savannah நிலம் பரந்து விரிந்து கிடக்கும் இந்த Kruger, தென்னாப்பிரிக்காவின் மிகப்பெரிய விளையாட்டு பூங்காவாகும்.
வேலியிடப்பட்ட முகாம்கள் மற்றும் சில சுற்றுலாப் பகுதிகளைத் தவிர, வாகனங்களிலிருந்து இறங்க அங்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டு அதே பூங்காவில் வேட்டையாடச் சென்ற ஒருவர் யானைகளால் கொல்லப்பட்டார்.