
சாந்தியாகோ, ஜூன்-27 – சிலி நாட்டின் வடக்கே உள்ள உலகின் மிக வறண்ட பாலைவனமான அட்டகாமாவில் நேற்று பனிப்பொழிவு ஏற்பட்டதால், அப்பகுதி வாழ் மக்கள் அதிசயித்துப் போயினர்.
நிலா போன்றதொரு மேற்பரப்பில் மெல்லிய வெள்ளைப் பனி படர்ந்திருந்த காட்சிகள் தற்போது வைரலாகியுள்ளன.
சிலி நாட்டின் வான் நிகழ்வு கண்காணிப்பகம் அதன் X தளத்தில் அந்த வீடியோவைப் பதிவேற்றியுள்ளது.
விடியற்காலையில் ஏற்பட்ட இந்தப் பனிப்பொழிவு கடந்த பத்தாண்டுகளில் நிகழ்ந்துள்ள முதல் நிகழ்வாகும்.
இந்நிலையில், இது அபூர்வமான வானிலை மாற்றத்திற்கான அறிகுறியா என்பதை இப்போதே சொல்வதற்கில்லை என, சாந்தியாகோ பல்கலைக்கழக காலநிலை நிபுணர்கள் கூறுகின்றனர்.
என்றாலும் அட்டகாமா பாலைவனத்தில் இனி மழைப் பெய்வதும் பனிப்பொழிவதும் அடிக்கடி நிகழக்கூடுமென்பதை மறுக்க முடியாது என அவர்கள் கூறியுள்ளனர்.
உலகிலேயே மிகவும் இருண்ட வானத்தைக் கொண்டதுமான அட்டகாமா பாலைவனம், உலகின் மிகவும் மேம்பட்ட தொலைநோக்கிகளை நிறுவுவதற்கு விஞ்ஞானிகள் மற்றும் வானியலாளர்கள் நீண்ட காலமாக விரும்பப்படும் இடமாக இருந்து வருகிறது