
குவந்தான், ஏப் 30 – குழந்தை பராமரிப்பாளரின் வீட்டில் விடப்பட்ட தனது 13 மாத மகனின் கழுத்து தொட்டில் துணியில் சிக்கியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து தாய் ஒருவர் பெரும் கவலை அடைந்துள்ளார்.
குழந்தை பராமரிப்பாளரின் அலட்சியத்தினால் தனது மகன் குவந்தான் அம்புவான் அப்சான் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் எட்டு நாட்கள் சிகிச்சை பெற்று, பின்னர் கண்காணிப்பு வார்டுக்கு மாற்றப்பட்டதாகக் தன்னை டிங் என்று மட்டுமே அடையாளம் கூறிக்கொண்ட 37 வயது பெண் கூறினார்.
ஏப்ரல் 15 ஆம் தேதி காலை 9.30 மணியளவில் குழந்தை பராமரிப்பாளர் தன்னைத் தொடர்பு கொண்டு, துணியில் கழுத்து சிக்கி தனது மகன் மயக்கமடைந்து கிடந்ததாகக் கூறினார். என் குழந்தையின் மூளைக்கு போதுமான ஆக்ஸிஜனைப் பெறாத நிலை இருப்பதாக மருத்துவர்கள் எனக்குத் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்துவதை உறுதி செய்வதற்காக தாம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளதாக நேற்று குவாந்தான் பிகேஆர் சேவை மையத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது அப்பெண் தெரிவித்தார்.
உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சர் டாக்டர் புசியா சாலேவின் சிறப்பு அதிகாரி கோ யீ யெனும் அப்போது உடனிருந்தார். இதனிடையே
புகார்தாரர் மற்றும் குழந்தைக்கு சிகிச்சை அளித்த மருத்துவ அதிகாரியிடமிருந்து போலீசார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக குவந்தான் போலீஸ் தலைவர் துணை கமிஷனர் வான் முகமட் வான் ஷஹாரி ( Wan Mohd Zahari Wan Busu) தெரிவித்தார்