Latestமலேசியா

என்னை இரண்டாவது துணைத் தலைவராக நியமிக்கும் பரிந்துரையை நிராகரித்தேன்; ரஃபிசி அம்பலம்

அம்பாங், ஜூன்-2 – பி.கே.ஆர் கட்சியின் இரண்டாவது துணைத் தலைவராக தம்மை நியமிக்கும் பரிந்துரையை தாம் நிராகரித்த விஷயத்தை, டத்தோ ஸ்ரீ ரஃபி ரம்லி அம்பலப்படுத்தியுள்ளார்.

புதியத் துணைத் தலைவராக பேராளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நூருல் இசா அன்வாரே அப்பரிந்துரையை முன் வைத்ததாக அவர் சொன்னார்.

“நூருல் இசா என்னை சந்தித்து அந்த யோசனையை முன் வைத்தார்; அவருடன் இணைந்து பணியாற்றுமாறு கேட்டுக் கொண்டார்”

“ஆனால் தலைவர் பதவியே கொடுத்தாலும் எனக்குத் தேவையில்லை” என ரஃபிசி திட்டவட்டமாக் கூறினார்.

தேர்தலில் தோற்றால் கட்சியில் எந்த பதவியிலும் இருக்கப் போவதில்லை என்பதை தாம் ஏற்கனவே திடமாக முடிவுச் செய்து விட்டதாக அவர் சொன்னார்.

மே 23 பி.கே.ஆர் கட்சித் தேர்தலில் நடப்புத் துணைத் தலைவராக இருந்த ரஃபிசியை நூருல் இசா தோற்கடித்தார்.

இதையடுத்து கடந்த வாரம் பொருளாதார அமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்த ரஃபிசி தற்போது விடுமுறை சென்றுள்ளார்.

அவரின் பதவி விலகல் ஜூன் 17-ஆம் தேதி அமுலுக்கு வரும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!