Latestமலேசியா

எஸ்.பி.எம் முடித்த 150,557 பேர் அரசாங்க பொது உயர்க் கல்வி கழகங்களில் பயிலும் வாய்ப்பை பெற்றனர்

புத்ரா ஜெயா, ஜூன் 16 – எஸ்.பி.எம் முடித்த 150,557 பேர் அரசாங்க உயர்க் கல்விக் கழகங்களில் கல்வியை தொடரும் வாய்ப்பை பெற்றனர். UPUOnline மூலம் பெறப்பட்ட 223,624 மொத்த விண்ணப்பங்களில் 33 விழுக்காட்டினர் அரசாங்க உயர்க்கல்விக் கழகங்களில் பயிலும் வாப்பை பெற்றனர். மொத்தம் 86,589 பேர் அரசாங்க பொது பல்கலைக்கழகங்களிலும் , 42,058 பேர் பாலிடெக்னிக் தொழிற்நுட்ப பல்கல்லூரிகளிலும் , 20,427 பேர் சமூகக் கல்லூரிகளிலும் மற்றும் MARA உயர்கல்வி பிரிவின் கீழ் உள்ள உயர்க்கல்வி நிறுவனங்களில் பயில்வதற்கு 1,483 பேர் வாய்ப்பைப் பெற்றனர். சிறப்பு வழித்தட சலுகைகள் வாயிலாக 17,693 பேரும் , குறைந்த வருமானம் பெறும் B 40 பிரிவைச் சேர்ந்த 16,189 பேரும் , மாற்றுத்திறனாளிகள் 590 பேர், 593 விளையாட்டு வீரர்கள் மற்றும் பூர்வ குடிகள் சமூகத்தை சேர்ந்த 321 பேரும் அடங்குவர் என கல்வி அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு சமூக நலத்துறையின் கீழ் உள்ள நிறுவனங்களில் இருந்து வெளியேறிய 43 பேரும் உயர்க்கல்வி நிலையங்களில் பயில்வதற்கான வாய்ப்பை பெற்றவர்களில் அடங்குவர் . இந்த மாணவர்கள் கொள்கை மற்றும் தகுதி அடிப்படையில் உயர்க்கல்வியை பயிலும் வாய்ப்பை பெற்றனர் என கல்வி அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 349 கல்வித் திட்டங்களில் டிப்ளோமாவுக்கான 252 கல்வித் திட்டங்களும் இளங்கலை பட்டப் படிப்பு , சான்றிதழ் ஆகியவையும் இவற்றில் அடங்கும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!