Latestஉலகம்மலேசியா

ஒடிசாவில் பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி கொலை; பழிதீர்த்த பெண்கள் கைது

ஒடிசா – ஜூன் 13 – கடந்த ஜூன் 2 ஆம் தேதி ஒடிசாவில், பாலியல் வன்கொடுமைச் செய்த 60 வயது முதியவனை, பழிதீர்க்கும் நோக்கில் வெட்டி கொன்று, உடலை பகுதியளவு எரித்த 8 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வீட்டிலிருந்து காணாமல் போன அந்த வயோதிகனின் உடல் 5 நாட்களுக்கு பிறகு காட்டு பகுதியில் பாதி எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட பெண்களில் ஒருவர், கம்பி எனப்படும் அம்முதியவன் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததால், கூர்மையான ஆயுதத்தைக் கொண்டு தாக்கியதாக காவல் துறையினரிடம் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

மேலும் அப்பகுதி மக்கள், அந்த முதியவன் பல பெண்களுடன் சட்டவிரோத பாலியல் உறவில் இருந்ததாகவும், அவன் மோசமான நடைத்தயை கொண்டவன் என்றும் கூறியுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!