
லண்டன், ஜூன்-14 – உலகப் புகழ்ப் பெற்ற முன்னாள் கால்பந்து வீரர் டேவிட் பேக்கமுக்கு, ஒருவழியாக பிரிட்டன் அரசாங்கத்தின் கௌரவ ‘சர்’ பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
மென்சஸ்டர் யுனைடெட் மற்றும் இங்கிலாந்து தேசியக் கால்பந்து அணிகளின் முன்னாள் வீரருமான பேக்கம், ஓய்வுப் பெற்ற பிறகும் பிரபலமாக வலம் வருகிறார்.
50 வயதில் உலகம் முழுவதும் இன்னமும் கோடிக்கணக்கான இரசிகர்களை அவர் கொண்டுள்ளார்.
மைதானத்திற்கு வெளியிலிலும் புகழின் உச்சிலிருந்த போதும், அவருக்கு ‘சர்’ பட்டம் என்ன காரணத்தாலோ வழங்கப்படாமலேயே இழுத்தடிக்கப்பட்டு வந்தது.
யார் யாருக்கோ ‘சாதனை’ என்ற பெயரில் ‘சர்’பட்டம் வழங்கப்பட, முழு தகுதி இருந்தும் பேக்கம் புறக்கப்பணிக்கப்பட்டது பலருக்கு நெருடலாகவே இருந்தது.
இந்நிலையில், நீண்ட நாள் காத்திருப்புக்குப் பிறகு, பேக்கமின் ஆசையையும், அவரின் கோடிக்கணக்கான இரசிகர்களின் எதிர்பார்ப்பையும் பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்ல்ஸ் இன்று நிறைவேற்றியுள்ளார்.
லண்டன் செயின்ட் ஹேம்ஸ் அரண்மனையில் மன்னர் சார்ல்ஸ் டேவிட் பேக்கமுக்கு அந்த ‘சர்’ பட்டத்தைக் கொண்டு வரும் knighhood விருதை வழங்கி கௌரவித்தார்.
காலம் கடந்து அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள பேக்கம் இனி ‘சர் டேவிட் பேக்கமாக’ வலம் வருவார்