
புத்ராஜெயா, மே-18- நேற்று ஒரே நாளில் நிகழ்ந்த 2 வேறு சம்பவங்களில், 2 வயது குழந்தையும் ஒரு வியட்நாமிய மாதுவும் அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து விழுந்து உயிரிழந்தனர்.
முதல் சம்பவத்தில் புத்ராஜெயா, பிரிசிண்ட் 9-ல் உள்ள பொது வீடமைப்புப் பகுதியில் ஏழாவது மாடியிலிருந்து விழுந்து 2 வயது ஆண் குழந்தை உயிரிழந்தது.
பிற்பகல் 2 மணிக்கு மேல் அத்துயரம் சம்பவம் நிகழ்ந்தது.
இரத்த வெள்ளத்தில் கிடந்த மகனை உள்ளூர் ஆடவர் புத்ராஜெயா மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தார்.
எனினும் பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்து விட்டதை உறுதிச் செய்தனர்.
விசாரணைக்கு உதவும் பொருட்டு இன்று சவப்பரிசோதனை நடத்தப்படுமென, புத்ராஜெயா போலீஸ் கூறியது.
சரவாக் கூச்சிங்கில் நிகழ்ந்த இரண்டாவது சம்பவத்தில், அடுக்குமாடி குடியிருப்பின் 12-ஆவது மாடியிலிருந்து விழுந்து வியட்நாமிய மாது மரணமுற்றார்.
முதல் மாடியில் இரத்த வெள்ளத்தில் கிடந்தவருக்கு முதலுதவிகள் வழங்கப்பட்டன.
எனினும் அவர் உயிரிழந்ததை மருத்துவக் குழு உறுதிப்படுத்தியது.