Latestமலேசியா

கள்ளக் குடியேறிகளை ஏற்றி வந்த மீன்பிடி படகு மோதியதில் 2 APMM வீரர்கள் காயம்

சிரம்பான், செப்டம்பர்-17 – APMM எனப்படும் மலேசியக் கடல்மார்க்க அமுலாக்க நிறுவனத்தின் ரோந்துப் படகை, கள்ளக் குடியேறிகளை ஏற்றியிருந்த மீன்பிடி படகு மோதியதில் 2 வீரர்கள் காயமடைந்தனர்.

இச்சம்பவம் நேற்றிரவு 8 மணிக்கு மேல் நெகிரி செம்பிலான் எல்லைக் கரையோரப் பகுதியில் நிகழ்ந்தது.

சந்தேகத்திற்குரிய ஒரு படகு செப்பாங், தஞ்சோங் ரூ (Tanjung Rhu) கரையோரத்தை நோக்கிச் செல்வதை கண்டறிந்த கடல் அமுலாக்கத் துறையின் ரோந்து படகு அதனைத் துரத்திச் சென்றது.

எனினும், அந்த மீன்பிடி படகு சுதாகரித்துக் கொண்டு, APMM படகை பலங்கொண்டு பக்கவாட்டில் மோதியது.

இதனால் APMM படகு கடும் சேதமடைந்த வேளை, மீன்பிடி படகு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பிச் சென்றது.

மோதப்பட்டதில் APMM படகு குலுங்கியதில் அதிலிருந்த இருவரில் ஒருவர் மூக்கிலும், இன்னொருவர் கை கால்களிலும் காயமடைந்து, பின்னர் போர்டிக்சன் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்; அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

சந்தேக நபர்களையும், கள்ளக் குடியேறி கடத்தல் கும்பலையும் பிடிக்கும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!