Latestமலேசியா

காஜாங்கில் சாலையில் ஓடிக் கொண்டிருந்த வாகனத்தின் மீது வேண்டுமென்றே போய் விழுந்த வெளிநாட்டு ஆடவர் கைது

காஜாங், செப்டம்பர்-23 – காஜாங், பண்டார் சுங்கை லோங்கில் திடீரென சாலைக்குள் புகுந்து, வேண்டுமென்றே வாகனத்தின் மீது விழுந்து விபத்தை ஏற்படுத்திய வெளிநாட்டு ஆடவர் கைதாகியுள்ளார்.

துப்புரவுப் பணியாளரான 32 வயது அவ்வாடவர் ஞாயிற்றுக்கிழமை மாலை கைதானதாக, காஜாங் போலீஸ் தலைவர் நாஸ்ரோன் அப்துல் யூசோஃப் (Naazron Abdul Yusof) தெரிவித்தார்.

சிறுநீர் பரிசோதனையில் அவ்வாடவர் போதைப்பொருள் எதுவும் உட்கொண்டிருக்கவில்லை என்பது உறுதிச் செய்யப்பட்டது.

இந்நிலையில் அவர் சாலையில் அவ்வாறு நடந்துகொண்டதற்கான காரணம் விசாரிக்கப்படுவதாக நாஸ்ரோன் கூறினார்.

செவ்வாய்க்கிழமை காலை நிகழ்ந்த அச்சம்பவத்தில், திடீரென சாலையின் குறுக்கே ஓடிய அந்நபர், வேகமாக வந்த வாகனத்தின் முன்னே விழுந்து விபத்தை ஏற்படுத்தினார்.

அதில் அந்நபருக்கு சிராய்ப்பு காயமேற்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!