Latestமலேசியா

கிரிக் விபத்தில் சம்பந்தப்பட்ட பஸ் அண்மையில் செர்வீஸ் செய்யப்பட்டது

கோலாலம்பூர், ஜூன் 9 – இன்று காலை உப்சி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 15 மாணவர்கள் உயிரிழப்புக்கு காரணமாக இருந்த விபத்துக்குள்ளான பஸ் அண்மையில்தான் செர்விஸ் அல்லது அதனை பராமரிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதோடு அந்த பஸ் ஓட்டுநர் இதுவரை விபத்தில் எதுவும் சம்பந்தப்படாமல் நல்லதொரு ஓட்டுனர் என்ற பதிவைக் கொண்டிருந்தார் என அந்த பஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் அந்த பஸ் செர்விஸ் செய்யப்பட்டதாக Kenari Utara Travel & Tours Sdn Bhd தெரிவித்தது.

சம்பந்தப்பட்ட பஸ் இதற்கு முன் எந்தவொரு பிரச்னையையும் எதிர்நோக்கவில்லை என்பதோடு திட்டமிட்ட அட்டவணைக்கு ஏற்ப அந்த பஸ் கடந்த மாதம் பராமரிப்பு பணிக்கு அனுப்பப்பட்டதாக Kenari Utara நடவடிக்கை பிரிவின் அதிகாரி நஸ்ரி நவி ( Nazri Nawi ) தெரிவித்தார். வேறொரு நிறுவனத்தால் தற்காலிகமாக பெறப்பட்ட அந்த பஸ் ஓட்டுநர், கெரிக்-ஜெலி வழித்தடத்தை நன்கு அறிந்த பொறுப்பான ஓட்டுநர் என்று அறியப்பட்டவராவார். நடந்த சம்பவம் மற்றும் உயிரிழந்த Sultan Idris கல்வியல் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் காயம் அடைந்தவர்கள் குறித்து தாம் பெரும் கவலையடைந்திருப்பதாக நஸ்ரி நவி தெரிவித்தார். 48 பேர் சம்பந்தப்பட்ட அந்த விபத்தில் 42 பேர் பல்கலைக்கழக மாணவர்கள், பஸ் ஓட்டுனர் , அவரது உதவியாளரும் இருந்தனர். மேலும் திருமணமான தம்பதியருடன் அவரது ஆறு வயது மகள், மூன்று வயது மகன் ஆகியோர் அந்த பஸ்ஸில் மோதிய புரோடுவா Alza காரில் இருந்தனர். இந்த விபத்து நிகழ்ந்த இடத்திலேயே UPSI பல்கலைக்கழகத்தின் 13 மாணவர்கள் இறந்த வேளையில் மேலும் இருவர் மருத்துவமனையில் மரணம் அடைந்தனர். சாலை பாதுகாப்பு ஆராய்ச்சிக் கழகம், தரை பொது போக்குவரத்து நிறுவனம் மற்றும் சம்பந்தப்பட்ட இதர நிறுவனங்களை கொண்ட சிறப்பு பணிக்குழுவை உட்படுத்திய விசாரணைக் குழுவை போலீசார் அமைத்துள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!