
கோலாலம்பூர், மார்ச் 21 – இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் யானை தாக்கப்பட்டதில் பெர்ஹிலித்தான் (Perhilitan) எனப்படும் பூங்கா மற்றும் வனவிலங்கு பாதுகாப்புத்துறையின் ஊழியரும் பொதுமக்களில் பெண் ஒருவரும் காயம் அடைந்தனர்.
கிளந்தான், Kuala Krai யிலுள்ள Laloh குடியிருப்பு பகுதியில் நேற்று காலையில் யானை தாக்கிய முதல் சம்பவம் நிகழ்ந்ததாக தீபகற்ப மலேசியா வனவிலங்கு மற்றும் பூங்காத்துறையின் தலைமை இயக்குநர் டத்தோ அப்துல் காதிர் அபு ஹசிம் (Datuk Abdul Kadir Abu Hashim) தெரிவித்தார்.
அதற்கு முன்னதாக கோலாக் கிராய், Laloh தேசிய இடைநிலைப் பள்ளிக்கு பின்புற பகுதியில் யானை தாக்கிய சம்பத்தில் அங்குள்ள குடியிருப்புவாசியான பெண்மணி ஒருவர் காயம் அடைந்ததாக கோலாக்கிராய் மாவட்ட பெர்ஹிலித்தானுக்கு தகவல் கிடைத்ததாக அவர் கூறினார்.
இதனைத் தொடர்ந்து விசாரணையை மேற்கொள்வதற்காக கோலாக் கிராய் மாவட்டத்தைச் சேர்ந்த வனவிலங்கு ஊழியர்களும் அதிகாரிகளும் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு சென்றனர்.
அவர்கள் விசாரணை மேற்கொண்டிருந்த வேளையில் அந்த யானை மேலும் முரட்டுத்தனமாக செயல்பட்டதால் வனவிலங்குத்துறையின் ஊழியரை தாக்கியதாக அப்துல் காதிர் கூறினார்.
யானையின் தந்தத்தினால் தாக்கப்பட்டதால் 40 வயது ஊழியர் வலது காலின் முட்டியில் காயத்திற்கு உள்ளனார்.
அவருக்கு கோலாக் கிராயிலுள்ள இஸ்மாயில் பெட்ரா (Ismail Petra) மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை வழங்கப்பட்டது.
ஆகக் கடைசியாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திரெங்கானு, Kuala Berang, kampung Basung கில் யானைக் கூட்டம் ஒன்று தாக்கி மிதித்ததில் கடுமையான காயத்திற்கு உள்ளான 65 வயதுடைய Musa Ahmad என்ற நபர் இறந்தார் .