Latestமலேசியா

கிள்ளாங் பள்ளத்தாக்கில் வரி இணக்கத்தை வலுப்படுத்தும் நடவடிக்கை- LHDN

புத்ராஜெயா, ஜூன் 16 – மலேசிய உள்நாட்டு வருவாய் வாரியம் (LHDN), வரி செலுத்துவோரிடையே வரி இணக்க கலாச்சாரத்தை வலுப்படுத்த, ஓபி மெட்ரோ 3.0 எனப்படும் எட்டாவது வரி இணக்க நடவடிக்கையை இன்று தொடங்கியுள்ளது.

ஜூன் 16 முதல் 20 வரை நடைபெறவுள்ள இந்த நடவடிக்கையில், மலேசிய நிறுவன ஆணையமும் (SSM), வரி இணக்கத் துறை, புலனாய்வுத் துறை, வருவாய் வசூல் துறை, உளவுத்துறை, விவரக்குறிப்புத் துறை, டிஜிட்டல் துறை ஆகியோருடன் இணைந்து மலேசிய உள்நாட்டு வருவாய் வாரியம் (LHDN) செய்யப்படவுள்ளதாக LHDN தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ டாக்டர் அபு தாரிக் ஜமாலுதீன் தெரிவித்துள்ளார்.

வருவாய் வாரியத்தின் முக்கிய நோக்கம் வரி இணக்கத்தை ஒரு சுமையாக அல்ல, ஒரு கலாச்சாரமாக மாற்றுவதே ஆகும் என்றும், தவறு செய்யும் எந்தவொரு தரப்பினரும் தக்க தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் அபு தாரிக் விளக்கமளித்துள்ளார்.

மேலும் நிபுணத்துவம் மற்றும் வளங்களை ஒருங்கிணைப்பதன் மூலம், வரிக் கொள்கைகளை செயல்படுத்துவது மிகவும் திறமையானதாகவும், விரிவானதாகவும், கட்டமைக்கப்பட்டதாகவும் இருக்கும் என்று நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!