
கிள்ளான், மே 20- நேற்று, கிள்ளான் தாமான் ஸ்ரீ காடோங்கில், வரி விதிக்கப்படாத மதுபானங்களைப் பள்ளி வேனில் கடத்த முயன்ற
26 வயது மதிக்கத்தக்க இளைஞனொருவன், காவல்துறையினரால் கைது செய்யப்பட்டான்.
அவ்வாடவன், லாரியிலிருந்த மதுபானங்களை, பள்ளி வேனில் ஏற்றிக் கொண்டிருக்கும் பொழுது, போர்ட் கிள்ளான் கடல் காவல் படை புலனாய்வு துறையினரிடம் (PPM) பிடிப்பட்டதாக, மலேசிய PPM தளபதி ரஸ்லி சி அரி (Rusley Chi Ari) தெரிவித்துள்ளார்.
மேலும், கடத்தப்பட்ட மதுபானங்கள் யாவும் தலா 36,889.57 ரிங்கிட் வரிமதிப்புக் கொண்டவைகள் எனவும் அதன் மொத்த தொகை, 10,000 ரிங்கிட்டுக்கும் மேற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து கைது செய்யப்பட்ட அந்நபர், வரி இல்லாத மதுபான விநியோகத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்ட நிலையில், அவ்வழக்கு மேலதிக விசாரணைக்கு உட்படுத்தப்படுமென்று போர்ட் கிள்ளான் காவல் துறையினரின் தெரிவித்துள்ளனர்.