Latestமலேசியா

கிள்ளான் பழக்கடை வெடிப்புக்கு carbide தூளே காரணம்; போலீஸ் தகவல்

கிள்ளான், ஜூன்-13 – சிலாங்கூர் பண்டார் பாரு கிள்ளானில் பழக்கடையில் நேற்று ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்துக்கு, பழங்களை பழுக்க வைப்பதற்குப் பயன்படுத்தப்படும் கார்பைட் (carbide) இராசயணத் தூளே காரணம் என போலீஸ் உறுதிச் செய்துள்ளது.

ஜாலான் கூடாங் நெனாஸ் சாலையில், மசூதிக்கு மக்கத்தில் அமைந்துள்ள அக்கடையின் பின்புறத்தில் அந்த தூள் வைக்கப்பட்டிருந்தது.

அவ்வெடிப்பில் பழங்களை வைக்கும் குளிரூட்டி அறை சேதமடைந்ததோடு, அங்கிருந்த சில வாகனங்களும் சிறிய அளவில் பாதிக்கப்பட்டன.

உயிர் சேதம் ஏற்படவில்லை என, வட கிள்ளான் போலீஸ் தலைவர் துணை ஆணையர் எஸ். விஜய ராவ் கூறினார்.

எனவே, விஷயம் தெரியாமல் பொது மக்களைப் பதற்றமடையச் செய்யும் யூகங்களை யாரும் எழுப்ப வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டார்.

முன்னதாக நேற்று மாலை 5 மணியளவில் அங்கு பயங்கர சத்தத்துடன் வெடிப்பு ஏற்பட்டதில், பொது மக்கள் அலறிபோயினர்.

பழக்கடை வெடிப்பின் சிதறல்கள் அருகிலிருந்த வாகனங்கள் மற்றும் மசூதி வரை போய் விழுந்தன.

பழங்களும் இதர வியாபாரப் பொருட்களும் சிதறியதோடு கடையின் கூரையும் பிய்த்துகொண்டு பறந்தது

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!