Latestமலேசியா

கிழங்கு ரொட்டியின் விலையை உயர்த்துவதா? ரொட்டி நிறுவனத்திற்கு 60,000 ரிங்கிட் அபராதம்

கிள்ளான், மே-26 – சிலாங்கூர், கிள்ளானில் கடந்தாண்டு உருளைக் கிழங்கு ரொட்டி விலையை உயர்த்திய ரொட்டி நிறுவனத்துக்கு, செஷன்ஸ் நீதிமன்றம் 60,000 ரிங்கிட் அபராதம் விதித்துள்ளது.

67 வயது அதன் இயக்குநர் Khu Kim Chai, வாக்குமூலத்தை மாற்றி குற்றத்தை ஒப்புக் கொண்டதால், நீதிபதி அத்தீர்ப்பை வழங்கினார்.

வழக்கின் நிறைவில் அவர் அபராதத் தொகையைச் செலுத்தினார்.

கொள்ளை இலாபம் பார்க்கு நோக்கில், கிள்ளானில் முகவரியைக் கொண்ட அந்த ரொட்டி உற்பத்தி நிறுவனம் உருளைக் கிழங்கு ரொட்டி விலையை RM3.35-லிருந்து RM3.51-னுக்கு உயர்த்தியதாக குற்றச்சாட்டில் கூறப்பட்டது.

இதன் மூலம் அதன் நிகர இலாப வித்தியாசம் 0.16 சென் அதிகரித்து, RM1.89-திலிருந்து RM2.05 வரை உயர்ந்துள்ளது.

கடந்தாண்டு மே 27-ஆம் தேதி தாமான் கிள்ளான் உத்தாமாவில் அக்குற்றம் புரியப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!