Latestமலேசியா

குவாந்தானில் முகாமிட்டு தங்குமிடத்தில் மரம் விழுந்து முதியவர் மரணம்; பேத்திக்கு தலையில் காயம்

குவாந்தான், செப்டம்பர் -18, குவாந்தான், Pantai Balok, Beserah-வில் முகாமிடும் தளத்தில் புயல் வீசியதில் மரம் மேலே விழுந்து 68 வயது முதியவர் மரணமடைந்தார்.

அவரின் 7 வயது பேத்தி தலையில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறாள்.

திரங்கானு, கெமாமானிலிருந்த வந்த அம்முதியவரும் குடும்பத்தார் 13 பேரும் திங்கட்கிழமை முதல் அங்கு முகாமிட்டு தங்கியிருந்தனர்.

இந்நிலையில் நேற்று பிற்பகல் வாக்கில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையின் அவர்களின் கூடாரத்தின் மேலே மரம் விழுந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

சடலம் சவப்பரிசோதனைக்காக சுல்தான் ஹாஜி அஹ்மாட் ஷா மருத்துவ மையத்திற்கு அனுப்பப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!