Latestமலேசியா

கோலாலம்பூரில் ISKCON-இல் பிரமாண்டமாக நடைபெற்ற ஸ்ரீ ஜகநாத சுவாமியின் ரத யாத்திரை

கோலாலம்பூர் ஜனவரி 5 – ISKCON கோலாலம்பூர் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஸ்ரீ ஜகநாத சுவாமியின் ரத யாத்திரை, நேற்று லிட்டில் இந்தியா, பிரிக் ஃபீல்ட்ஸில் உள்ள Kandiah மண்டபத்தில் பக்தி, ஆன்மீகம் மற்றும் பண்பாட்டு உணர்வுகளுடன் மிக சிறப்பாக நடந்தேறியது.

இந்த அற்புதமான சமய நிகழ்வில் முக்கிய பிரமுகராக டத்தோ சிவக்குமார் நடராஜா கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இந்த நிகழ்வு, பல்வேறு சமூகங்களை ஒன்றிணைக்கும் வகையில் பண்பாடு, ஆன்மீக விழுமியங்கள் மற்றும் சமூக ஒற்றுமையை பிரதிபலிக்கும் வண்ணமயமான விழாவாக அமைந்தது என்று டத்தோ சிவக்குமார் தெரிவித்தார். ISKCON நிறுவனம் நீண்ட காலமாக பாதுகாத்து வரும் பழமையான ஆன்மீக மரபுகள் மற்றும் பக்தி வழிபாட்டு போதனைகள் இந்நிகழ்வின் மூலம் வெளிப்பட்டன.

சமகால சமூகத்தில் உருவாகும் சவால்களை எதிர்கொள்ள உதவும் நிலையான ஆன்மீக வழிகாட்டுதல்களை ISKCON கோலாலம்பூர் தொடர்ந்து பரப்பி வருவது, பங்கேற்றவர்களுக்கு ஊக்கமளிக்கும் அனுபவமாக இருந்தது எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிகழ்வை சிறப்பாக நடத்தி, அனைவருக்கும் ஆன்மீக ரீதியில் நிறைவான அனுபவத்தை வழங்கிய ஏற்பாட்டாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன. இத்தகைய நிகழ்வுகள், சமூகத்தில் ஒற்றுமை, பரஸ்பர மரியாதை மற்றும் ஆன்மீக வளர்ச்சியை ஊக்குவிப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன என்றால் அது மிகையாகாது.

இந்த உயரிய ஆன்மீகப் போதனைகள், எதிர்காலத்திலும் அமைதியையும் கருணையையும் நிறைந்த சமுதாயத்தை உருவாக்க தொடர்ந்து ஊக்கமளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!