Latestமலேசியா

சரவணன் தலைமையில் மரபு கவிதைத் தொகுப்பு 2 நூல் அறிமுகம் & பயிலரங்கு நிறைவு விழா

கோலாலம்பூர், மே-18- மறைந்த கவிஞர் ப.இராமு அறக்கட்டளை ஏற்பாட்டில் ம.இ.கா தலைமையகத்தின் நேதாஜி மண்டபத்தில் மரபுக் கவிதைத் தொகுப்பு 2 அறிமுகம் மற்றும் மரபு கவிதைப் பயிலரங்கு நிறைவு விழா என இரட்டை விழா நடைபெற்றது.

ம.இ.கா தேசியத் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் அதற்குத் தலைமைத் தாங்கினார்.

2021-ல் மலேசியக் கவிஞர்கள் தங்கள் படைப்பை வெளியாக்கத் தளம் ஏற்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்டது தான் ப.இராமு அறக்கட்டளை.

அதன் கீழ் புதுக் கவிதைகள், மரபுக் கவிதைகள் என தனித்தனியாக நூலாக்கப்பட்டு வெளியிடப்படுகின்றன.

அவ்வகையில் இந்த மரபுக் கவிதைத் தொகுப்பு 2 நூலும், கல்லூரி மாணவர்கள் அனுப்பிய சிறந்த கவிதைகளைக் கொண்டு உருவாகி வருவதாக, அறக்கட்டளையின் தோற்றுநருமான டத்தோ ஸ்ரீ சரவணன் தெரிவித்தார்.

முனைவர் மனோன்மணி தேவி அண்ணாமலை எழுதிய ‘எளிய முறையில் இனிய யாப்பு’ என்ற நூலும் அதன் போது வெளியீடு கண்டது.

அவர் தலைமையில் மரபு கவிதை எழுதுவதற்கான பயிற்சிப் பட்டறையும் அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்டது.

பயிற்சியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான சரவணன் சான்றிதழ்களை எடுத்து வழங்கினார்.

பயிற்சிப் பட்டறையில் மாணவர்களின் பங்கேற்பு ஊக்கமளிக்கும் வகையில் இருந்தாக, முனைவர் மனோன்மணி வணக்கம் மலேசியாவிடம் கூறினார்.

இலக்கிய ஆர்வலர்கள், ஆசிரியர்கள், உயர் கல்விக் கூட மாணவர்கள் என சுமார் 70-க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!