
கோலாலம்பூர், ஜூன் 26 – 142,000 சிங்கப்பூர் டாலர் மதிப்புடைய 2 கிலோவுக்கும் அதிகமான கஞ்சா மற்றும் ஷாபு போதைப்பொருட்களை கடத்த முயன்ற சந்தேகத்தின் பேரில் 46 வயது மலேசிய பெண் ஒருவர் திங்கள்கிழமை சிங்கப்பூரில் கைது செய்யப்பட்டார்.
உட்லேண்ட்ஸ் சோதனைச் சாவடியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, அந்தப் பெண் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளின் முன்புறம் மூடப்பட்ட பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கட்டுப்படுத்தப்பட்ட போதைப்பொருட்கள் இருப்பதாக நம்பப்படும் இரண்டு பொட்டலங்கள் கண்டறியப்பட்டதாக குடிநுழைவு சோதனை மையத்தின் ஆணையம் மற்றும் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்தன.
அதே இடத்தில் மொத்தம் ஏழு பொட்டலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவற்றில் 1,057 கிராம் கஞ்சாவும் 973 கிராம் ஷாபு போதைப் பொருளும் இருப்பது தெரியவந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். சிங்கப்பூருக்கு 250 கிராமிற்கு மேல் மெத்தம்பேட்டமைன் ( Methamphetamine ) அல்லது 500 கிராமுக்கு மேல் கஞ்சாவை கொண்டுச் செல்லும் நபர்கள் பிடிபட்டால் 1973 ஆம் ஆண்டு போதைப்பொருள் தவறாக பயன்படுத்தும் சட்டத்தின் கீழ் மரண தண்டனையை எதிர்நோக்க நேரிடும்