
சிரம்பான், ஏப் 18 – சிரம்பானில் உள்ள வர்த்தக மையத்தில் திங்கட்கிழமையன்று பாராங் கத்தியினால் ஆடவர் ஒருவரை தாக்கி காயப்படுத்தியதாக 47 வயது நபர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. செஷன்ஸ் நீதிபதி டத்தின் சுரித்தா புடின் முன்னிலையில் கொண்டுவரப்பட்ட குற்றச்சாட்டை அந்த நபர் மறுத்தார்.
சிரம்பான் கேட்வேயில் முதல் மாடியிலுள்ள தொலைதொடர்பு கடையில் ஏப்ரல் 14 ஆம்தேதி இரவு மணி 8.10 அளவில் அந்த குற்றச்சாட்டை அவர் புரிந்ததாக கூறப்பட்டது.
தண்டனை சட்டத்ததன் 326 ஆவது பிரிவின் கீழ் கொண்டுவரப்பட்ட இந்த குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டால் கூடியபட்சம் 20 ஆண்டு சிறை , அபராதம் அல்லது பிரம்படி விதிக்கப்படலாம் .
சம்பந்தப்பட்ட ஆடவருக்கு 15,000 ரிங்கிட் ஜாமின் அனுமதிக்கப்பட்டதோடு , அவரது அனைத்துலக கடப்பிதழை நீதிமன்றத்தில் ஒப்படைப்பதுடன் இந்த வழக்கு முடியும்வரை ஒவ்வொரு மாதமும் அருகேயுள்ள போலீஸ் நிலயத்தில் ஆஜராக வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது.