
பெய்ஜிங், மே 28 – தென் சீனாவில் சாகசம் செய்வதாக நினைத்து
ஆடவர் ஒருவர் தனது காரின் பின்புறத்தில் 39. 5 கிலோ கொண்ட ராட்சஷ கெண்டை மீனை கட்டி அதனை தொங்கவிட்டு எடுத்துச் செல்வதை படம்பிடித்து சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது வைரலானதால் இணைய பயனர்களிடையே பலவிதமான நகைச்சுவையான எதிர்வினைகளைத் தூண்டியது. எனினும் அந்த நபரின் இந்த செயல் சாலைப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருந்ததோடு மற்றும் தன்மூப்பான நடவடிக்கைக்காக தண்டிக்கப்படுவார் என தன்னாட்சி பிரதேசமான Guangசி Zhuang கில் உள்ள போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.
சம்பந்தப்பட்ட அந்த நபர் மே 15 ஆம் தேதியன்று நகரத்தை சுற்றி வருவதற்கு முன்பு, ஒரு மீட்டர் நீளமுள்ள மீனின் தலை மற்றும் வாலை தனது காரில் கட்டி தொங்கவிட்டுள்ளார். அந்த ராட்சஷ மீனை அருகிலுள்ள பிங்டியான்ஷான் அணையில் அந்நபர் பிடித்ததாக நம்பப்படுகிறது. அந்த ஆடவருக்கு எதிராக அபராதம் விதிப்பது அல்லது அந்த அவரின் கார் ஓட்டுநர் உரிமத்திலிருந்து புள்ளிகளைக் கழிப்பது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். வாகனங்களில் தொங்கும் பொருட்கள் 0.5 மீட்டருக்கு மேல் இருக்கக்கூடாது என்பது சீன சாலை பாதுகாப்பு விதிமுறைகளில் ஒன்றாகும்.