Latestஉலகம்

சீனாவில் சரிந்து விழுந்த புதிய பாலம்; உயிர் சேதங்கள் பதிவாகவில்லை

சீனா, நவம்பர் 12 – சீனாவின் தென்மேற்கு பகுதியில், இவ்வாண்டு ஆரம்பத்தில் திறக்கப்பட்ட புதிய பாலம் ஒன்று சரிந்து விழுந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அச்சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லையென்று கூறப்பட்டது.

கடந்த திங்கட்கிழமை மதியம், 758 மீட்டர் நீளமுடைய அப்பாலத்தின் அருகிலுள்ள சாலைகளிலும் மலைச்சரிவுகளிலும் பிளவுகள் ஏற்பட்டதால், பாலம் உடனடியாக மூடப்பட்டது.

நேற்று, மலைப்பகுதியின் நிலைமை மேலும் மோசமடைந்து, பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதன் விளைவாக பாலத்தின் அணுகுமுறையும் சாலைப் பகுதியும் இடிந்து விழுந்தன என்று உள்ளூர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!