Latestமலேசியா

சுபாங் ஜெயா வெளிநாட்டு தொழிலாளர் குடியிருப்பில் ஆடவர் கழுத்தறுத்துக் கொலை

சுபாங் ஜெயா, மே-23 – சிலாங்கூர், சுபாங் ஜெயாவில் அந்நியத் தொழிலாளர் குடியிருப்பில் சக நாட்டவரால் கழுத்தறுக்கப்பட்டு வெளிநாட்டவர் இறந்துகிடந்தார்.

ஜாலான் SS 14 சாலையில் நேற்று மாலை அச்சம்பவம் நிகழ்ந்ததாக, சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் சூப்ரிடென்டண்ட் மொஹமட் ஃபைருஸ் ஜாஃபார் கூறினார்.

அத்தொழிலாளிகளின் முதலாளியான உள்ளூர் ஆடவர் போலீஸிடம் புகார் செய்தார்.

தடயவியல் குழு மற்றும் மோப்ப நாய்களுடன் சம்பவ இடம் விரைந்த போலீஸ், 29 வயது சந்தேக நபரைக் கைதுச் செய்தது.

கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட கத்தியும் பறிமுதல் செய்யப்பட்டது.

கொலைக்கான காரணம் இன்னமும் விசாரணையில் இருப்பதாக ஃபைருஸ் கூறினார்.

மரணமடைந்தவர் உட்பட்ட கட்டட துப்புரவுப் பணியாளர்கள் நால்வர் அங்கு தங்கி வந்துள்ளனர்.

அவர்கள் அனைவரும் சட்டப்பூர்வத் தொழிலாளர்கள் என்பதையும் போலீஸ் உறுதிப்படுத்தியது

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!