
கோலாலம்பூர், ஜூன் 10 – செராஸ் அலாம் ஷா அறிவியல் இடைநிலைப் பள்ளி ( Sekolah Menengah Sains Alam Shah ) இன்று
விடியற்காலையில் ஏற்பட்ட தீ விபத்தில் அழிந்தது. விடியற்காலை மணி 4.15 அளவில் இது குறித்து தங்களுக்கு தகவல் கிடைத்தவுடன் பண்டார் துன் ரசாக் , ஹங் துவா மற்றும் செராஸ் தீயணைப்பு நிலையங்களில் இருந்து மூன்று தீயணைப்பு வண்டிகள் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு சென்று விரைந்து தீயை அணைக்கும் நடவடிகையில் ஈடுபட்டதாக பண்டார் துன் ரசாக் தீயணைப்பு நிலையத்தின் தலைவர் முகமட் அஸிசி அப்துல்லா தெரிவித்தார்.
ஆசிரியர் அறை, கூட்ட அறை, கோப்புகள் அறை மற்றம் இதர பல அறைகளைக் கொண்ட அப்பள்ளியின் நிர்வாகப் நிர்வாகப் பகுதி
அழிந்தன. தீயினால் நிர்வாக கட்டிடப் பகுதி 100 விழுக்காடு
அழிந்தாக அறிவிக்கப்பட்டது.