
கோலா தெரெங்கானு, மே 24 – நேற்று, கோலா தெரெங்கானுவில் சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்ட, இந்தோனேசியர்கள் உட்பட 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
32 முதல் 56 வயதுக்குட்பட்ட சந்தேக நபர்கள், கம்போங் அத்தாஸ் டோல் (Kampung Atas Tol) குடியிருப்பு பகுதியில் சேவல் சண்டையில் ஈடுபட்டிருந்த போது, காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாக மாநில காவல்துறைத் தலைவர் டத்தோ முகமட் கைரி கைருடின் (Datuk Mohd Khairi Khairudin ) தெரிவித்துள்ளார்.
மாநில கால்நடை சேவைகள் துறை கொடுத்துதவிய தகவலின் படி மேற்கொண்ட இந்தச் சோதனையில், 4 சேவல்கள், சேவல் சண்டைப் பத்திரம், 5,823 ரிங்கிட் ரொக்கம் மற்றும் மற்றும் இதர பொருட்களும் பரிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முதல் கட்ட விசாரணையில், சந்தேக நபர்கள் அனைவரும் போதை பொருள் உட்கொண்டிருப்பது தெரிய வந்த நிலையில், காவல் துறையினர் மேல் விசாரணையைத் தொடர்ந்துள்ளனர்.