
புத்ராஜெயா, ஏப்ரல்-30, 360 மில்லியன் ரிங்கிட் போலிக் கணக்குக் காட்டி மோசடி செய்த சந்தேகத்தில், ஒரு டத்தோ ஸ்ரீ உட்பட நால்வரை, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC கைதுச் செய்துள்ளது.
அவர்களில் ஒருவர் பெண் ஆவார்.
50 முதல் 70 வயதிலான அந்நால்வரும் நேற்று புத்ராஜெயா MACC அலுவலகத்திற்கு வாக்குமூலம் அளிக்க வந்த போது கைதாகினர்.
கிள்ளான் பள்ளத்தாக்கில் 1.30 பில்லியன் ரிங்கிட் நெடுஞ்சாலை கட்டுமானத் திட்டம் தொடர்பில், 2016 – 2017 காலக்கட்டத்தில் அவர்கள் அந்தப் போலிக் கணக்கைக் காட்டியுள்ளனர்.
செய்யாத வேலைக்கு சட்டவிரோதமாக பணம் பெற்ற அச்செயல், 2009 MACC சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுகிறது.
அவர்களை விசாரணைக்குத் தடுத்து வைக்க இன்று நீதிமன்ற ஆணைப் பெறப்படவிருக்கிறது