
தோக்யோ, ஜூன் 23 – ஜப்பானில் Iwate மற்றும் Chiba வட்டாரத்தில் கடுமையான வெப்ப அலையின் காரணமாக வயதான இருவர் மரணம் அடைந்தனர். 84 வயதான மூதாட்டி ஒருவர் ஞாயிற்றுக்கிழமையன்று தனது வீட்டில் மயங்கிய நிலையில் காணப்பட்டதைத் தொடர்ந்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுச்செல்லப்படுவதற்கு முன்னதாகவே அவர் மரணம் அடைந்ததாக உறுதிப்படுத்தப்பட்டது. Iwate வட்டாரத்தில் வெப்ப நிலை 30.4 செல்சியசிற்கும் கூடுதலாக இருந்தது.
மற்றொரு சம்பவத்தில் Chiba வட்டாரத்தில் 95 வயதுடைய ஆடவர் ஒருவர் தனது வீட்டில் சுயநினைவற்ற நிலையில் காணப்பட்டார். உள்ளூர் நேரப்படி நண்பகல் 1.30 மணியளவில் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போதிலும் அவர் அங்கு உயிரிழந்தாக அறிவிக்கப்பட்டது. அந்த இருவரின் உயிரிழப்புக்கு கடுமையான வெப்ப அலையினால் ஏற்பட்ட பாதிப்பே காரணம் என தெரியவந்துள்ளது.
வெப்ப அலையின் காரணமாக Iwate வட்டாரத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று மேலும் 11 தனிப்பட்ட நபர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது.